Popular Posts

Friday, December 30, 2011

காதலால் !!



                   

என்னையும் கேட்காமல் நான் சுவாசிக்கிறேன் !!

என்னையும் அறியாமல் உன்னை நேசிக்கிறேன் !!

மழைத் துளிப் போல் நித்தமும் உன்னிடம் வீழ்கிறேன் !!

காதலனே, உன் விழியில் நீர் வந்தால், நான் மடிகிறேன் !!

இதழைப் பிரிக்கத்தான் நினைக்கிறேன் !!

ஆயினும் , மௌனங்களைப் படிக்கிறேன் !!

கனவுகளில் உன் தோள் சாய்கிறேன் !!

நிஜங்களில் உன் விரல் தொடவும் மறுக்கிறேன் !!

சிறகுகள் விரித்துப் பறக்கத்தான் நினைக்கிறேன் !!

ஏனோ கூண்டிலே கிளியாய்த்  துடிக்கிறேன் !!

வார்த்தைகள் பல தேடி , கவிதைகள் கோர்க்கிறேன் !!

கோர்த்த வார்த்தைகளில் இல்லாத பொருளைத் தேடுகிறேன் !!

பொருள் சேர்க்கத்தான் இன்று வந்தாயோ !!

காதலின் அர்த்தம் ! அதை என்னுள் சேர்தாயோ !!

                                                                                           -மாயா

வாராயோ என்னிடம்..!!






மனம் கொண்ட ஆசைகளைத்,
திரை செய்யவில்லை நான் !!
சிப்பியில் அடைக்காத்த முத்தாய் ,
மௌனம் காத்தேன் !!
தென்றலின் வருகைக் கண்டு ,
ஆவலாய் மலர்ந்து நிற்கும் மொட்டினைப்போல் ,
இன்று காத்திருக்கிறேன் உன் பார்வைக்காக !!
அலைமேல் நுரைகள் நகர்ந்துவிடுமோ அன்பே ??
உன் வருகையை எதிர்பார்க்கும்
என் கண்கள் தான் சோர்ந்து விடுமோ ??
தூரலின் பின்பும் தொடரும்
கிளை மேகங்களின் சாரலாய் ,
இருள் பாய்ந்த நெஞ்சுக்குள்ளும் ,
காண்கிறேன் கிழக்காய் ஓர் விளக்கை !!
காதலின் ஜோதியோ அவை ??
விடைக்கான வாராயோ ??
என்னவளே .. அதற்கான பதிலை
அருகாமையில் உணர்த்த வாராயோ ??

                                                                      -மாயா

Friday, December 23, 2011

கனவுக்கன்னி !!

கானல் நீரில் குழைத்த வண்ணங்களாய் நின்றாயே ,
என் கனவின் காட்சிகளில்..!!
புயல் எதிர்த்த மரமாய் நின்ற எனக்கு,
நித்திரையில் காட்டினாயே தென்றலின் தேகத்தை..!!
எத்தனை நாள்தான் தொடருவேன் அன்பே, கனவிலேயே?
கற்பனை உருவத்திற்கு உயிரூட்ட வாராயோ?
பெண்ணே ,
என் வாழ்வின் மீதியாய்..
என் உயிரின் பாதியாய்..
என் கைகள் இணைத்து ,
உன் காதலை பரிசளிக்க !?
                                                       -மாயா