Popular Posts

Friday, December 30, 2011

காதலால் !!



                   

என்னையும் கேட்காமல் நான் சுவாசிக்கிறேன் !!

என்னையும் அறியாமல் உன்னை நேசிக்கிறேன் !!

மழைத் துளிப் போல் நித்தமும் உன்னிடம் வீழ்கிறேன் !!

காதலனே, உன் விழியில் நீர் வந்தால், நான் மடிகிறேன் !!

இதழைப் பிரிக்கத்தான் நினைக்கிறேன் !!

ஆயினும் , மௌனங்களைப் படிக்கிறேன் !!

கனவுகளில் உன் தோள் சாய்கிறேன் !!

நிஜங்களில் உன் விரல் தொடவும் மறுக்கிறேன் !!

சிறகுகள் விரித்துப் பறக்கத்தான் நினைக்கிறேன் !!

ஏனோ கூண்டிலே கிளியாய்த்  துடிக்கிறேன் !!

வார்த்தைகள் பல தேடி , கவிதைகள் கோர்க்கிறேன் !!

கோர்த்த வார்த்தைகளில் இல்லாத பொருளைத் தேடுகிறேன் !!

பொருள் சேர்க்கத்தான் இன்று வந்தாயோ !!

காதலின் அர்த்தம் ! அதை என்னுள் சேர்தாயோ !!

                                                                                           -மாயா

வாராயோ என்னிடம்..!!






மனம் கொண்ட ஆசைகளைத்,
திரை செய்யவில்லை நான் !!
சிப்பியில் அடைக்காத்த முத்தாய் ,
மௌனம் காத்தேன் !!
தென்றலின் வருகைக் கண்டு ,
ஆவலாய் மலர்ந்து நிற்கும் மொட்டினைப்போல் ,
இன்று காத்திருக்கிறேன் உன் பார்வைக்காக !!
அலைமேல் நுரைகள் நகர்ந்துவிடுமோ அன்பே ??
உன் வருகையை எதிர்பார்க்கும்
என் கண்கள் தான் சோர்ந்து விடுமோ ??
தூரலின் பின்பும் தொடரும்
கிளை மேகங்களின் சாரலாய் ,
இருள் பாய்ந்த நெஞ்சுக்குள்ளும் ,
காண்கிறேன் கிழக்காய் ஓர் விளக்கை !!
காதலின் ஜோதியோ அவை ??
விடைக்கான வாராயோ ??
என்னவளே .. அதற்கான பதிலை
அருகாமையில் உணர்த்த வாராயோ ??

                                                                      -மாயா

Friday, December 23, 2011

கனவுக்கன்னி !!

கானல் நீரில் குழைத்த வண்ணங்களாய் நின்றாயே ,
என் கனவின் காட்சிகளில்..!!
புயல் எதிர்த்த மரமாய் நின்ற எனக்கு,
நித்திரையில் காட்டினாயே தென்றலின் தேகத்தை..!!
எத்தனை நாள்தான் தொடருவேன் அன்பே, கனவிலேயே?
கற்பனை உருவத்திற்கு உயிரூட்ட வாராயோ?
பெண்ணே ,
என் வாழ்வின் மீதியாய்..
என் உயிரின் பாதியாய்..
என் கைகள் இணைத்து ,
உன் காதலை பரிசளிக்க !?
                                                       -மாயா

Friday, November 11, 2011

நிலவும் ! அவளும் !



வெள்ளியை உருக்கி , மிளிரும் தேகமாய்
வானில் வெளிச்சம் தராமல் ஏனோ வெண்ணிலவே, 
இன்று கரு மேகமாய் தேகத்தில் ஒளி குன்றி நிற்கிறாய்...!!

பௌர்ணமியாம் அவள் கண்களும்,
உன்னைப்போல் கலை இழந்து,
இன்று ஐப்பசி மேகமாய் வாடியுள்ளதே !?

நட்சத்திரங்களின் சேர்க்கை இல்லாமல்,
நீ நிற்கும் தனிமை தான்,
அவளையும் வாட்டுகிறதோ?

யுகம் யுகமாய்..
நீ காக்கும் மௌனவிரதம் போல்,
அவள் சிற்றிதழ் இன்று சிரிக்கவும் மறந்ததேனோ?

ஓரிடத்தில் உன்னை சுகந்திரம் அன்றி..
சிறைப்பிடித்த ஆண்டவன்,
அவள் எண்ணங்களின் பாதைகளையும் சிறைப்பிடிக்கிறானோ?

வளரும் நேரங்களில்,மறையும் தேகம் கொண்ட வெண்ணிலவே..
நகரும் நொடிகளில்,இவள் கண்ணீரும் மறைய ஓர் வழி சொல்லாயோ??

                                                                                -மாயா.

Monday, November 7, 2011

தேன் அல்ல தேனீர் !!




சிலந்தியின் வலை என்று தெரியவில்லை அப்பொழுது..
காதல், சிறு தூண்டில் என்றே எண்ணினேன்..

வானவில் போல், அழகாய் சிரிக்கும் உன் பார்வையோ ,
என் பார்வையின் பாரத்தைக் கூட்டும் என்று தெரியவில்லை அப்பொழுது..

உயிரின் வருகை எனவே எண்ணிக் கொண்டிருந்தேன்..
உன் உயிரையும் நீ தொலைத்துவிடுவாய் என்று எவரும் சொல்லவில்லை அப்பொழுது..

என் நினைவோடு விளையாடும் நிஜமாகும் என்று நினைத்தேன்..
ஏனோ காதல்,
அதன் வரவோடு விளையாட கைபொம்மை ஆக்கிவிட்டது என்னை!!

நன்றி சொல்ல வேண்டும் அன்பே உனக்கு..
காதலோ தேன் கூட்டின் தேன் என்று எண்ணிய எனக்கு,
தேனீர்களின் கோரங்களாய்க்  கூட இருக்கலாம் என்று உணர்த்தியதற்கு..!!

                                                                         -மாயா




500 ரூபாய்



200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க!!

Thursday, November 3, 2011

படிக்கிறேன்!!


சுகமான சுமையுடன்..
பிரிவான உறவுடன்..
வராத வார்த்தைக்காக..
நித்தமும் தவறாமல் படிக்கிறேன்,
உன் மௌனத்தை!!
நீ அனுப்பிய,
உன் திருமணப் புகைப்படத்தில்..!!
                          
                                   -மாயா

Wednesday, November 2, 2011

Few Messages to Pass...

1.  If you see children Begging anywhere in INDIA, please contact:
"RED SOCIETY" at 9940217816. They will help the children for their studies.


2.
Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of donor address. www.friendstosupport.org

3.
Engineering Students can register in www.campuscouncil.com to attend Off Campus for 40 Companies.

4.
Free Education and Free hostel for Handicapped/Physically Challenged children.
Contact:- 9842062501 & 9894067506.


5.
If you find any important documents like Driving license, Ration card, Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any near by Post Boxes. They will automatically reach the owner and Fine will be collected from them.

6.  By the next 10 months, our earth will become 4 degrees hotter than what it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of us lend our hands to fight GLOBAL WARMING.
-Plant more Trees.
-Don't waste Water & Electricity.      
-Don't use or burn Plastics

7.  It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth.
"TREES DO IT FOR FREE"
"Respect them and Save them"


8.   Special phone number for Eye bank and Eye donation: 04428281919 and 04428271616 (Sankara Nethralaya Eye Bank). For More information about how to donate eyes plz visit these sites.
http://ruraleye.org/

9.  
Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba Institute Banglore. 10.
Contact : 9916737471

10.
Medicine for Blood Cancer!!!!
'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. Its available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create Awareness. It might help someone.
Cancer Institute  in Adyar, Chennai
Category:  Cancer
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar
Chennai -600020
Landmark: Near Michael School
Phone:  044-24910754  044-24910754 ,  044-24911526  044-24911526 ,  044-22350241  044-22350241


11.  
Please CHECK WASTAGE OF FOOD
If you have a function/party at your home in India and food gets wasted, don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the number of Child helpline.
They will come and collect the food. Please circulate this message which can help feed many children.
AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
Please Save Our Mother Nature for
"OUR FUTURE GENERATIONS"

Friday, October 21, 2011

பார்த்திபன் கனவு



                         கல்கியின் இன்றியமையாத பெருமைகளின் காரணங்களுள் ஒன்று. கல்கியின் வார்த்தைகளை மேன்படுத்திக் காட்டுவதற்குத் தான் இப்படி ஒரு சரித்திரம் முன் நடந்ததோ ? இல்லை, ஈடு இணை அற்ற இந்த வீரமும் விவேகமும் கலந்த நிகழ்வுகளை மேலும் வலுபடுத்த அத்தகைய வார்த்தைகளை உபயோகித்தாரோ? ஒன்றுக்கு ஒன்று எவ்வளவு அழகு சேர்க்கிறது?

                       பல ஆயிரம் ஆண்டுக்கு முன்னம் இத்தனை வாழ்க்கைத்  தந்திரமும் வீரமும் வைராக்கியமும் நம் தமிழர்கள் இடையே இருந்ததன் எடுத்துக்காட்டை விளக்குகிறது இந்த பார்த்திபன் கனவு..



                     
                         உலகப்  பொதுமறையாம் திருக்குறளைப் பேணி பாதுகாத்தார்கள் சோழர்கள். சோழர்களின் தலை சிறந்த பெருமைகளுள்  இதுவும் ஒன்றே. 




                        வீர பார்த்திப மகாராஜா, நரசிம்மவர்ம பல்லவன் இவர்களைப் பற்றி இன்று நான் தெரிந்துக்கொண்ட  வியப்படையதக்க குணங்களும் செயல்களும் ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியவை. பல்லவர்களின் யுக்திகள் தான் எப்பேர்ப்பட்டவை?! எதிரியே ஆயினும், அவன் வீர மரணத்தைக் கண்டு வணங்குவதும் , சாட்சி அல்லாத வாக்கே ஆயினும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று உறுதி கொள்வதும் என உயர்ந்த குணங்கள்  கொண்ட பல்லவன் மாமல்லனின் புகைப்படதையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது.



                           நம் நாட்டில் அந்நாளிலே சிற்பங்களுக்கும் சித்திரங்களுக்கும் கலைகட்கும் அரசர்களும் மாஹா பிரபுக்களும் கொடுத்த முக்கியத்துவத்தை அறிந்தால், இன்று நம்மவர், சிற்பங்களை உடைப்பதும் , துஷ்டம் செய்வதும் , மாசு படுத்துவதும் போன்ற இன்னல்களை செய்ய மாட்டார்கள் !! மாமல்லபுரம் தோற்றத்தின் முன்னம் அந்த சிற்பங்களைத்  தோற்றுவிக்க மகேந்திரவர்மன் இட்ட யோசனையை அறியும் போதே நம் எண்ணம் அந்த பாறைகளை மனத்திரையில் நிறுத்துகிறது.






                                     அதிகாலை விடியலையும் காவிரி ஆற்றின் தேகத்தையும்  இவ்வளவு அழகாகவும் கூர்மையாகவும் வர்ணிக்க முடியுமா என்ன?  அத்தனை கலை நயம் வார்த்தைகளில்.   காவிரியின் அழகையும் கம்பீரத்தையும் நேரில் நிறுத்தியதாய் தோன்றியது ஒவ்வொருமுறையும்.

                           விசுவாசம் என்னும் வார்த்தையின் அர்த்தம் இவ்வுலகில் குன்றிவருகிறது என்பதே எனது கருத்து. இக்காலத்து மானிடர்கள் எல்லோரும் , நம் முன்னவர்களான மன்னர் ஆட்சியில் வாழ்ந்த குடிமக்களின் விசுவாசத்தைப் பற்றி சிறிதாவது படித்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன் !! விசுவாசத்தின் கதாப்பாத்திரங்கள் பொன்னன், வள்ளி அந்நாளில் வாழ்ந்திருந்தனர்.

                              'பார்த்த நொடியில் பிறக்கும் காதல்' என்பதில் சற்றும் நம்பகம் இல்லாதவள் நான். அனால், அன்று வாழ்ந்த விக்கிரம சோழன் , குந்தவி தேவி இன் காதல் பாகங்களைப் படிக்கையிலே , 'ஒருவேளை அப்படியும் பார்த்தவுடன் காதல் பிறக்குமோ' என்ற சலன எண்ணம் தோன்றலாயிற்று எனக்கு. ஓரிரு இடங்களில் சிவகாமி அம்மையின் நடனத்தையும், மாமல்லன் மீது அவளுற்ற காதலையும் பற்றி கூறியமையால், 'சிவகாமி சபதம்' புத்தகத்தை உடனே படித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் வளர்கிறது !!

                              'ஆரப்போட்டால் ஆறிவிடும்' என்பதற்கு எடுத்துக்காட்டு, வடித்த சோறு அன்றி, நம் தமிழர்களின் பெருமைகளோ , இத்தகைய இணையற்ற படைப்புகளோ அல்ல. பார்த்திபனின் கனவைப்போல் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஓர் லட்சியத்தை வளர்த்துக் கனவு காண வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!!    


 http://ebookforu.blogspot.com/2010/12/parthiban-kanavu-kalki.html

                               
                                                                         -மாயா

Wednesday, October 19, 2011

என் நட்பிற்காக!!





ஆலமரத்தின் விதைஎனவே ..
விழுந்தாய் என் இதயத்திலே !!
துளிர் விட்டது மரத்தினைப் போல்
நம் நட்பும்..!!
சிறு கொழுந்தென காட்டியது ,
நம் பாடங்களின் வலிமையே !!
வீழும் விழுதுகளைப்  போல் வீழ்ந்தது ,
என் எண்ணம் ...என்றும் பிரியமாட்டோம் என்றே !!
நிழல் நீட்டும் இலக்கணமாய் என்றும்,
என் கையோடு கோர்த்து நிற்கும் உன் இணைப்பு !!
மடிக்க நினைத்தாலும் முடியாது நண்பனே,
நம் நட்பின் காலத்தை !!
வாழ்நாளின் இறுதி வரை,
இணைந்தே இருப்போம்!!
நட்பின் சுவடுகளோடு என்றும்...!!

                                                         --மாயா  

Monday, October 17, 2011

நம்முள் நாம்!!

காத்திருக்கும் கணங்கள் தான் உணர்கிறேன் அன்பே
நம் காதலின் சுவாரஸ்யத்தை ...

வார்த்தைகள் கோர்வையாய் வராத பொழுதேனும்
தேடுகிறேன் அன்பே சொற்களை...

உரையாடல்களை முடித்துக்கொள்ள
மனம் ஒப்புக்கொள்ள வில்லை அன்பே..

தீராமல் தொடர வேண்டும் அன்பே
உன்னை நோக்கி நான் சிந்தும் சிந்தனைகள்...

என்றும் முடியாமல் நீள வேண்டும் அன்பே
உன் நெஞ்சில் என் நினைவுகள்..

உறங்கும் நேரமும் நெஞ்சோடு நிறையும் சுவாசமாய்,
என்றும் வேண்டும் அன்பே...

என்னுள் நீயும் !!
உன்னுள் நானும்!!


                   -மாயா


Saturday, October 15, 2011

புன்னகையுடன் !!





விண்ணில் இருந்து
வந்த முதல் துளி..,
குவிந்த மண்ணில் வீழ்ந்து ,
மண்ணின் வாசம் வெளிவந்த நேரம் இன்று..
என் இதயத்தில் புதைந்து கிடந்த ,
நினைவு விதைகள் முளைக்கின்றனவோ..
இரவில் மிளிரும் பளிங்கு கற்களைப்போல்.,
மின்னிய என் சிநேகிதங்கள்.!
இரவின் விண்மீன் மாநாடைப்போல்...,
நாங்கள் அமர்ந்த வகுப்பின் தடங்கள்...,
பாறையில் உறங்கிக் கொண்டிருக்கும்
உளியின் கைப்படாத சிற்பங்களாய்...
எங்கள் பிஞ்சு நெஞ்சங்களிலே தங்கிய ஆசைகள்...
குளிர் காற்று பட்டும் திறந்திடாத மொட்டுகளின் மேல்
ஆதரவில்லாத பனி துளிகளை ,
அகற்றிய சூரியனாய்..
இமை தாண்டி வந்த பாரங்களை ,
அகற்றிய தோழமைகள்..
உருகும் உள்ளங்களுடன் நாங்கள்,
பகிர்ந்து கொண்டோம் சில அன்பு கனாக்கள்..
விண்நீர் கடல் சேரும் இந்நேரம்,
என் கண்ணீரும் பொங்கி..
கன்னங்களின் கரை சேரும் இந்நேரம்..
புன்னகையுடன்...!!
                             
                                                    - மாயா

Tuesday, September 27, 2011

அவள் !!


நான் எட்டு வைத்த முதலடியோ,
அவள் எல்லையற்ற மகிழ்ச்சியின் பிறப்பிடம்..!

என் ஆனந்தங்களின் பின்னால் ,
மறைந்திருக்கும் !! அவள் தியாகங்கள் !!

அவளன்றி நானில்லை என்பேன்!
நான் இல்லாவிடில், அவள் அவளாக அல்ல என்பதறிந்து !!

என் அறிவுப் பசியை முன்பு  தூண்டியவள்..
அகரத்தை ஆழமாகக் கற்றுத்தந்தவள் !!

பசியின் தடம் கூடத் தெரியாமல்,
தன் குருதியை உருமாற்றி, எனக்குப் பாலூட்டியவள் !!

என் கண்ணீர் கரைசேரும் முன்னமே,
அவள் கைகள் என் முகத்தைப் புதைத்துக்கொள்ளும் !!

பாறைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற சிற்பங்களாய்..
ஒரு  முகத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற தெய்வங்கள் தானே அவள் !!

வார்த்தைகளின் தேடல் தான் முடிவிடம் அடையாது..
அவளை முற்றும் வெளிப்படுத்தவே !!

என்னைப் பார்க்காத நொடியிலிருந்தே என்னைக் காதலிப்பவள்..
இவ்வுலகம் விட்டு, அவளைப்பார்க்காத தூரம் சென்றாலும், காதலிப்பேன் என் உயிருக்கும் மேலாக !!

அவள், என் உயிரின் பிறப்பிடம் !!
அவள், என் தாய் !!

                                                               -மாயா

 

Friday, September 23, 2011

என் காதல் திருமணம்..

[ முகம் தெரியாத பாத்திரங்களுக்குத்
 தோற்றுவித்த கவிதைகளுக்கு மாறாக,
 என் கணவருக்காக,
 நான் சிந்திய மைகளின் வரைபடம் இது... ]

வார்த்தைகளின் பரிமாற்றத்தால்..
தொடங்கிய சிநேகம்..

மழைத்துளிகளின் ஆசியுடன்..
உருவாகிய நேசம்..

தொடர்ந்த உரையாடல்களால்..
வளர்ந்த காதல்..

முற்றத்தின் கோலமாய் வாழ்வில் தொடங்கி,
என்றும் பிரியா  காலமாய் மாரியதற்றே இந்த துணை..

தயக்கங்கள் தான் விலகி, தாலாட்டும் பனிக்காற்றின் சாட்சியாய்,
வார்த்தைகள் அற்ற மௌனங்களினால் உரையாடினோம், அன்று..!




இதயத்தைத் தடுமாறச் செய்யும் அனுபவமாய் நிறைந்த காதலை,
சொற்களால் பகிர்ந்து கொண்டோம், நிலவின் சாட்சியாய் நேற்று..!

நேரங்களில் நிறைந்து சிறு நொடியும் பிரியாமல்,
இணைந்தாய் என் நினைவாய்..

அக்கினியின் சாட்சியாய், என்றும் வாழும் உயிராய்
நிறைந்தாய்  அன்பே என்னுள், இன்று..!!

                                                                -மாயா

Thursday, September 22, 2011

அழியாத சுவடு காதல்..

உன் கை கோர்த்து நடந்தப்  பாதைகளில் பதிந்த சுவடுகள்,
மெல்ல மெல்ல மறையப் பார்க்கின்றன..!!
என் சொந்தம் தானோ என்று பொத்திவைத்த நிழலும் ,
இருள் வர மறைந்துத்  தேய்கின்றன..!!
பௌர்ணமியாய் மின்னிய நம் காதலும்,
இன்று தேய்பிறை தேகமாய் நகர்கின்றன..!!
மடித்தாலும் மறையாத நினைவுகள் மட்டும்..
எந்தன் நியாபகத்தை சோதித்துப்பார்கிறது..!
வேண்டாம் என்றாலும் உடலோடு சேரும் சுவாசமாய்,
மறைத்து விட முடியாது அன்பே.. உன் தாக்கத்தை..!!
அன்பில் திழைத்து உன்னோடு கைகள்  கோர்க்க எண்ணுகிறேன்..
ஏமாற்றங்களைப் பரிசளித்து , என் கண்ணீரை வரவழைத்திடுவாயோ??
மேலும் அழவே , சற்றும் சக்தி இன்றி ஏங்குகிறேன்!!
'அழியாத சுவடடி  நம் காதல் எனக்கு'..!!

                                                     -மாயா

Tuesday, September 20, 2011

ஒற்றை வாழ்கை இது!


மரக்கிளைகளின் கீழே உள்ள நிழலுக்குத் தெரிவதில்லை..
இலைகளை அனுபவிக்கும் சுட்டெரிக்கும் சூரிய வெட்பத்தை..!!
தேன் சேர்க்கும் வண்டுகளுக்குத் தெரிவதில்லை..
ஓர் மலரின் புன்னகையை அது உறிஞ்சுகிறது என்று..!!
எங்கும் உலவும் தென்றலுக்குத் தெரிவதில்லை..
தான் கொள்ளும் பயணங்களின் வரைப்படத்தை..!!
முற்றும் இடங்களோ,
சந்திக்கும் சொந்தங்களோ,
எவருக்கும் தெரிவதில்லை..
இந்த வரமான வாழ்க்கைப் பயணத்தில்.
திரை பின்னாலும் தெரியாத சில உண்மைகளும்..
புன்னகைக்குப் பின்னாலும் ஒளிந்துக் கொண்டிருக்கும் சில வலிகளும்..
எவரும் வரவேற்கவில்லை, மறைதிடவும் இல்லை..
மறுக்கவும் இல்லை!! இந்நிகழ்கால நிஜங்களை!
ஒரு பக்கமே ஆயினும், ரசித்திடுவோம்..!!
ருசிதிடுவோம்.. ஒற்றை வாழ்கையை..
இந்த ஒற்றை வாழ்கையை..!!

                                                        -மாயா

நீளாதோ இந்நேரம் ??




விண்ணிற்கும் தான் தெரிந்துவிட்டதோ ?!
இரு இதயங்களின் சத்தம் !!
வாழ்த்துரையாய் சாரலைத் தூவுகிறது கண்முன்னால் ...
காற்றுக்கும் தான் புரிந்து விட்டதோ ?!
என் கண்களின் தேடல் !!
நங்கள் அமர்திருந்த ஊஞ்சல் ஆட்டத்தை நிருத்தியப்பின்னும் ,
காற்றில் ஆடும் ஆடைகளாய், அவன் பக்கம் ...
மனதோடு ஆடிக்கொண்டிருந்தேன்.
இதமாய் தொட்டுச்சென்ற தென்றலின் மேல் ,
சின்ன கோபம் வந்தது ஏனோ??
காதல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்க தான் வந்தாயோ என்று..
மௌனங்களின் இடையிலும் கேட்க முயன்றேன்..
மாற்றிக் கொண்ட பார்வைகளின் மொழிகளை..!!
ஆயினும் சில நொடிகளில்,
உன் பார்வையின் கதிர்கள் என் மேல் விழ,
வெட்கத்தால் வரவேற்க மறுத்தேன்.!!
இன்னும் நீளாதோ என்று கேட்டுக்கொண்டேன்..
அருகாமையின் துணையாய் வரவே..
காலத்திடம்.. !!!

                                          -மாயா
                 

Monday, September 19, 2011

விடியா இரவு..


விடியலும் தான் இன்று ,
பொடிநடை போடுவதேனோ ??
துயரங்கள் தான் விடிய,
இரவும் விடிய வேண்டும் என்பதனாலோ?!?!
துளி நீரை மேகம் சிந்தினால் ..
மழை என ரசிக்கும் என் கண்களும் இன்று..
மழை என ஒத்திகைக் காட்டுகிறது...!
வெயில் மட்டும் உலவும் தரையின் மேல் ,
பாதகங்கள் உடன் போக,
வழி தெரியாத வழிப்போக்கனாய் ..!!!
என் நினைவுகளும் இந்த இரவினை ..,,
நிலையற்று நகர்வதேனோ ....??
ஒரு பார்வையும் படாமல்,
அலை நீர் மட்டும் தொட்டுச் செல்லும்...
தொலைதூரக் கடற்கரையின் முடிவிடம் தேடி..
சிறு நத்தையும் உலவுவதைப் போல் ..!!
நிகழும் எதுவும் தொடராமல் ...
மனித மூச்சு உலவாத இடத்தில்...,
குடில் ஒன்று வேண்டுகிரதே ..!!
என் சிறு இதயம்.. துயர் கொண்ட ..,
இடிந்த சுவராய்....!!!

-மாயா

தொலைந்த என் காதல் ...!!!




இன்றொரு நாள் எண்ணுகிறேன் ...!
அன்றொரு நாள் நடந்தவற்றை ...!
என்றும் உதட்டின் ஓரம் புன்னகை உடன் ,
பிஞ்சு கைகளில் நீ அணிந்திருந்த வளையல்கள் ...,
கூட்டத்தின் இடையில் ,
என்னை விட்டுப் பிரியா வண்ணம் உன் கைகளால்
என்னைப் பற்றிக்கொண்டது ...!
கொலுசு கடைக்காரனிடம் கொலுசு வாங்கியது !
மணல் வெளி உன் அழகிய பாதத்தைச் சுட்டு விடுமோ என்று ,
என் முதுகின் மீது நீ தொற்றிக்கொண்டது ...!
பூ போட காபி பாவாடை முட்களின் இடையில் மாறிய போது ,
'மாமா' என்று அழுதது ...!
உன் வருகை முன் ...உன் தாயின் கர்பத்திலிருந்து,
நீ வந்த நேரத்தில் ...!
"உன்னவள் பிறந்து விட்டாள் " என்று என் தாய் கூரிய பொழுதில் இருந்து ,
தொடங்கிய காதல் கதை இது..
கதை காவியமாக மாறிய இந்த பொழுது வரை ...!
எண்ணங்கள் என் நினைவில் நிலையாய் இருக்கிறது...!
இன்றொரு நாள் எண்ணுகிறேன் ...!
உன் குழந்தையை நான் ஏந்துகையில் ....!
நினைவுகள் நின்றுவிடுமோ ...என்றே தயக்கம் எனக்கு ...!
உன் கணவன் தன் செல்வத்தை ,
என் கைகளில் இருந்து எடுத்து சென்றவுடன் ...!

-மாயா


இன்று நான் அனுபவித்த ஒரு நொடி..


ஆயிரம் கவிதைகள் படிக்கவில்லை..
ஆயினும் அர்த்தங்கள் அல்லாத ஓசைகளுக்கு உணர்ந்தேன் அர்த்தங்கள்..
மெல்லிய மௌனங்களின் ஊடுருவல் என்னுள்..
கவிதையில் மட்டும் நான் வரைந்து கொண்டிருந்த காதல் நாயகிகளின் நிலையில் நான்!
தென்றல் போல் இதயத்தை வருடிய காதலனின் பார்வைகள்!!
எங்கோ தூரத்தில் கேட்கும் முன்னொரு நாள் நான் ரசித்த பாடல்..
அதன் வரிகளின் அடையாளம் இவள் தானோ என்பதை வினாவும் அவன் கண்கள்!
முற்றிய கிளையின் மேல் ஒற்றைப் பூவாய்..
காதல்.. இவ்வளவு அழகாய்..
காதல் கொண்ட வாழ்க்கை அதனினும் அழகாய் உணர்ந்தேன் இந்த நொடி..!!
அவன் காதலின் ஆழத்தை நான் உணர்த்த இந்த நொடி!!

- மாயா