Popular Posts

Friday, September 23, 2011

என் காதல் திருமணம்..

[ முகம் தெரியாத பாத்திரங்களுக்குத்
 தோற்றுவித்த கவிதைகளுக்கு மாறாக,
 என் கணவருக்காக,
 நான் சிந்திய மைகளின் வரைபடம் இது... ]

வார்த்தைகளின் பரிமாற்றத்தால்..
தொடங்கிய சிநேகம்..

மழைத்துளிகளின் ஆசியுடன்..
உருவாகிய நேசம்..

தொடர்ந்த உரையாடல்களால்..
வளர்ந்த காதல்..

முற்றத்தின் கோலமாய் வாழ்வில் தொடங்கி,
என்றும் பிரியா  காலமாய் மாரியதற்றே இந்த துணை..

தயக்கங்கள் தான் விலகி, தாலாட்டும் பனிக்காற்றின் சாட்சியாய்,
வார்த்தைகள் அற்ற மௌனங்களினால் உரையாடினோம், அன்று..!




இதயத்தைத் தடுமாறச் செய்யும் அனுபவமாய் நிறைந்த காதலை,
சொற்களால் பகிர்ந்து கொண்டோம், நிலவின் சாட்சியாய் நேற்று..!

நேரங்களில் நிறைந்து சிறு நொடியும் பிரியாமல்,
இணைந்தாய் என் நினைவாய்..

அக்கினியின் சாட்சியாய், என்றும் வாழும் உயிராய்
நிறைந்தாய்  அன்பே என்னுள், இன்று..!!

                                                                -மாயா

1 comment: