நான் எட்டு வைத்த முதலடியோ,
அவள் எல்லையற்ற மகிழ்ச்சியின் பிறப்பிடம்..!
என் ஆனந்தங்களின் பின்னால் ,
மறைந்திருக்கும் !! அவள் தியாகங்கள் !!
அவளன்றி நானில்லை என்பேன்!
நான் இல்லாவிடில், அவள் அவளாக அல்ல என்பதறிந்து !!
என் அறிவுப் பசியை முன்பு தூண்டியவள்..
அகரத்தை ஆழமாகக் கற்றுத்தந்தவள் !!
பசியின் தடம் கூடத் தெரியாமல்,
தன் குருதியை உருமாற்றி, எனக்குப் பாலூட்டியவள் !!
என் கண்ணீர் கரைசேரும் முன்னமே,
அவள் கைகள் என் முகத்தைப் புதைத்துக்கொள்ளும் !!
பாறைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற சிற்பங்களாய்..
ஒரு முகத்தில் மறைந்திருக்கும் எண்ணற்ற தெய்வங்கள் தானே அவள் !!
வார்த்தைகளின் தேடல் தான் முடிவிடம் அடையாது..
அவளை முற்றும் வெளிப்படுத்தவே !!
என்னைப் பார்க்காத நொடியிலிருந்தே என்னைக் காதலிப்பவள்..
இவ்வுலகம் விட்டு, அவளைப்பார்க்காத தூரம் சென்றாலும், காதலிப்பேன் என் உயிருக்கும் மேலாக !!
அவள், என் உயிரின் பிறப்பிடம் !!
அவள், என் தாய் !!
-மாயா




