Popular Posts

Thursday, September 22, 2011

அழியாத சுவடு காதல்..

உன் கை கோர்த்து நடந்தப்  பாதைகளில் பதிந்த சுவடுகள்,
மெல்ல மெல்ல மறையப் பார்க்கின்றன..!!
என் சொந்தம் தானோ என்று பொத்திவைத்த நிழலும் ,
இருள் வர மறைந்துத்  தேய்கின்றன..!!
பௌர்ணமியாய் மின்னிய நம் காதலும்,
இன்று தேய்பிறை தேகமாய் நகர்கின்றன..!!
மடித்தாலும் மறையாத நினைவுகள் மட்டும்..
எந்தன் நியாபகத்தை சோதித்துப்பார்கிறது..!
வேண்டாம் என்றாலும் உடலோடு சேரும் சுவாசமாய்,
மறைத்து விட முடியாது அன்பே.. உன் தாக்கத்தை..!!
அன்பில் திழைத்து உன்னோடு கைகள்  கோர்க்க எண்ணுகிறேன்..
ஏமாற்றங்களைப் பரிசளித்து , என் கண்ணீரை வரவழைத்திடுவாயோ??
மேலும் அழவே , சற்றும் சக்தி இன்றி ஏங்குகிறேன்!!
'அழியாத சுவடடி  நம் காதல் எனக்கு'..!!

                                                     -மாயா

No comments:

Post a Comment