விண்ணிற்கும் தான் தெரிந்துவிட்டதோ ?!
இரு இதயங்களின் சத்தம் !!
வாழ்த்துரையாய் சாரலைத் தூவுகிறது கண்முன்னால் ...
காற்றுக்கும் தான் புரிந்து விட்டதோ ?!
என் கண்களின் தேடல் !!
நங்கள் அமர்திருந்த ஊஞ்சல் ஆட்டத்தை நிருத்தியப்பின்னும் ,
காற்றில் ஆடும் ஆடைகளாய், அவன் பக்கம் ...
மனதோடு ஆடிக்கொண்டிருந்தேன்.
இதமாய் தொட்டுச்சென்ற தென்றலின் மேல் ,
சின்ன கோபம் வந்தது ஏனோ??
காதல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்க தான் வந்தாயோ என்று..
மௌனங்களின் இடையிலும் கேட்க முயன்றேன்..
மாற்றிக் கொண்ட பார்வைகளின் மொழிகளை..!!
ஆயினும் சில நொடிகளில்,
உன் பார்வையின் கதிர்கள் என் மேல் விழ,
வெட்கத்தால் வரவேற்க மறுத்தேன்.!!
இன்னும் நீளாதோ என்று கேட்டுக்கொண்டேன்..
அருகாமையின் துணையாய் வரவே..
காலத்திடம்.. !!!
-மாயா

No comments:
Post a Comment