Popular Posts

Friday, December 30, 2011

காதலால் !!



                   

என்னையும் கேட்காமல் நான் சுவாசிக்கிறேன் !!

என்னையும் அறியாமல் உன்னை நேசிக்கிறேன் !!

மழைத் துளிப் போல் நித்தமும் உன்னிடம் வீழ்கிறேன் !!

காதலனே, உன் விழியில் நீர் வந்தால், நான் மடிகிறேன் !!

இதழைப் பிரிக்கத்தான் நினைக்கிறேன் !!

ஆயினும் , மௌனங்களைப் படிக்கிறேன் !!

கனவுகளில் உன் தோள் சாய்கிறேன் !!

நிஜங்களில் உன் விரல் தொடவும் மறுக்கிறேன் !!

சிறகுகள் விரித்துப் பறக்கத்தான் நினைக்கிறேன் !!

ஏனோ கூண்டிலே கிளியாய்த்  துடிக்கிறேன் !!

வார்த்தைகள் பல தேடி , கவிதைகள் கோர்க்கிறேன் !!

கோர்த்த வார்த்தைகளில் இல்லாத பொருளைத் தேடுகிறேன் !!

பொருள் சேர்க்கத்தான் இன்று வந்தாயோ !!

காதலின் அர்த்தம் ! அதை என்னுள் சேர்தாயோ !!

                                                                                           -மாயா

No comments:

Post a Comment