Popular Posts

Thursday, June 18, 2020

கனவுக்கன்னி !!


கானல் நீரில் குழைத்த வண்ணங்களாய் நின்றாயே 
என் கனவின் காட்சிகளில் !!
 
புயல் எதிர்த்த மரமாய் நின்ற எனக்கு
நித்திரையில் காட்டினாயே தென்றலின் தேகத்தை !!
 
எத்தனை நாள்தான் தொடருவேன் அன்பே, கனவிலேயே?
கற்பனை உருவத்திற்கு உயிரூட்ட வாராயோ?
 
பெண்ணே ,
என் வாழ்வின் மீதியாய்
என் உயிரின் பாதியாய்
என் கைகள் இணைத்து 
உன் காதலை பரிசளிக்க !?
                                                  

                                                    -மாயா

No comments:

Post a Comment