
ஆயிரம் கவிதைகள் படிக்கவில்லை..
ஆயினும் அர்த்தங்கள் அல்லாத ஓசைகளுக்கு உணர்ந்தேன் அர்த்தங்கள்..
மெல்லிய மௌனங்களின் ஊடுருவல் என்னுள்..
கவிதையில் மட்டும் நான் வரைந்து கொண்டிருந்த காதல் நாயகிகளின் நிலையில் நான்!
தென்றல் போல் இதயத்தை வருடிய காதலனின் பார்வைகள்!!
எங்கோ தூரத்தில் கேட்கும் முன்னொரு நாள் நான் ரசித்த பாடல்..
அதன் வரிகளின் அடையாளம் இவள் தானோ என்பதை வினாவும் அவன் கண்கள்!
முற்றிய கிளையின் மேல் ஒற்றைப் பூவாய்..
காதல்.. இவ்வளவு அழகாய்..
காதல் கொண்ட வாழ்க்கை அதனினும் அழகாய் உணர்ந்தேன் இந்த நொடி..!!
அவன் காதலின் ஆழத்தை நான் உணர்த்த இந்த நொடி!!
- மாயா
awesum..... i got a diff feel while reading....:)... keep posting da...:)
ReplyDeleteA true expression... Nice...Author name also..
ReplyDeleteExcellent da sheelu....:) antha oru nodi nam ellorudaya vaalkaiyium iruku...:)
ReplyDelete