Popular Posts

Monday, September 19, 2011

தொலைந்த என் காதல் ...!!!




இன்றொரு நாள் எண்ணுகிறேன் ...!
அன்றொரு நாள் நடந்தவற்றை ...!
என்றும் உதட்டின் ஓரம் புன்னகை உடன் ,
பிஞ்சு கைகளில் நீ அணிந்திருந்த வளையல்கள் ...,
கூட்டத்தின் இடையில் ,
என்னை விட்டுப் பிரியா வண்ணம் உன் கைகளால்
என்னைப் பற்றிக்கொண்டது ...!
கொலுசு கடைக்காரனிடம் கொலுசு வாங்கியது !
மணல் வெளி உன் அழகிய பாதத்தைச் சுட்டு விடுமோ என்று ,
என் முதுகின் மீது நீ தொற்றிக்கொண்டது ...!
பூ போட காபி பாவாடை முட்களின் இடையில் மாறிய போது ,
'மாமா' என்று அழுதது ...!
உன் வருகை முன் ...உன் தாயின் கர்பத்திலிருந்து,
நீ வந்த நேரத்தில் ...!
"உன்னவள் பிறந்து விட்டாள் " என்று என் தாய் கூரிய பொழுதில் இருந்து ,
தொடங்கிய காதல் கதை இது..
கதை காவியமாக மாறிய இந்த பொழுது வரை ...!
எண்ணங்கள் என் நினைவில் நிலையாய் இருக்கிறது...!
இன்றொரு நாள் எண்ணுகிறேன் ...!
உன் குழந்தையை நான் ஏந்துகையில் ....!
நினைவுகள் நின்றுவிடுமோ ...என்றே தயக்கம் எனக்கு ...!
உன் கணவன் தன் செல்வத்தை ,
என் கைகளில் இருந்து எடுத்து சென்றவுடன் ...!

-மாயா


4 comments:

  1. paara sheela finally created blog :) welcome :) this one u wrote in class na ?? i remember da one of my favourite writings of yours :) keep writing:)

    ReplyDelete
  2. Nandri Kutta...Ya.. In our 2nd yr class room!!
    :) Sure Sure.

    ReplyDelete